ரிப்பன் பக்கோடா
--------------------------
ரிப்பன்
பக்கோடா
மதிய நேரம் மழைக்காலங்களில் பக்கோடா செய்து
சாப்பிடுவது பிடிக்கும் ஒரு முறை கோவையில் என் நண்பன் ஒருவன்வீட்டில் பக்கோடா தந்தார்கள் நல்ல
மொறுமொறுவென இருந்தாலும் வாயில் வைத்ததும் கரைந்தது
அது முதல் என் மனைவியிடம் அதே மாதிரி பக்கோடா செய்து தர கேட்பேன் அதன் அடிப்படையே நாம் அதில் சேர்க்கும் மாவின் கலவைதான் என்பாள் என் மனைவி சில நாட்களுக்கு முன் ரிப்பன் பக்கோடா
செய்தாள் நன்றாக இருந்தது பூவையின் எண்ணங்களில்
பதிவிட செய்முறை கேட்டேன்
தேவையான
பொருட்கள்
அரிசி மாவு கடலைமாவு பொட்டுக்கடலை மாவு
வெண்ணை சீரகப் பொடி மிளகாய்ப் பொடி பெருங்காயப்பொடி
உப்பு எண்ணை
அளவுகள்
ஓரொர் இடத்தில் மாறு படும்நல்ல க்ரிஸ்பான ரிப்பன்பக்கோடாவுக்கு பொட்டுக்கடலை மாவு துணை போகும் சாதாரணமாக ரெசிப்பிகளில் பொட்டுக்கடலை மாவு
சொல்ல மாட்டார்கள்
எந்த
அளவானாலும் மூன்றுக்கு இரண்டுக்கு ஒன்று என்னும்வீததில் கடலை மாவு அரிசி மாவு
பொட்டுக்கடலைமாவு இருக்க வேண்டும் முதலில் செய்யும் போது சிறிதே குவாண்டிடியில்
செய்யவும் சரியாக வந்தால் அடுத்தமுறை அதிகம் செய்யலாம்
முதலில் எல்லா மாவையும்சிறிது வெண்ண கலந்து
நன்றாக மிக்ஸ்செய்யவும் இந்தக்கலவையை நீர் ஊற்றி சற்று கெட்டியாகவே பிசையவும் அப்போதே மிளகாய்ப் பொடிசீரகப் பொடி பெருங்காப்பொடி உப்பு
எல்லாம்சேர்த்து நன்கு கலக்கவும் அச்சில் போட்டு பிழியும் அளவுக்கு கெட்டியாக இருக்கட்டும் நீர்க்க வேண்டாம் வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன்ரிப்பனச்சில்
எண்ணையில் பிழியவும் மொறு மொறுவெனவரும்போது எடுத்து விடவும்
என்னதான்
ரெசிப்பி கொடுத்தாலும் செய்பவரின் ஞானமும் இருக்கிறது என்பதே அனுமானம்
என்ன நண்பர்களே ரிப்பன் பக்கோடா அல்லது ஓலைப்பக்கோடா எப்படி வந்தது என்றுசொல்லுங்கள்