Tuesday 26 April 2016

தக்காளி செய்முறை ஒன்று உபயோகம் பல


                                       தக்காளி செய்முறை ஒன்று உபயோகம் பல
                                       --------------------------------------------------------------------

தக்காளி ஒரு செய்முறை பல உபயோகம்
பூவையின் எண்ணங்களில் தொடர்ந்து எழுத ஆசை. ஆனால் எழுதும் சமையற் குறிப்புகள் எடுபடுமா என்பதே சந்தேகம் இருந்தாலும் எளிய சில குறிப்புகள் பலருக்குத் தெரிந்திருந்தாலும் சிலருக்குப் புதிதாக இருக்கலாம் ஒரு எளிய முறையில் தக்காளியை உபயோகிக்கும் விதமே இது செய் முறையும் எளிது
 முதலில் தக்காளியை தேவையான அளவு எடுத்துக் கொண்டு நன்கு கழுவி மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும் அரைக்கும் போதே தேவையான உப்பு மிளகாய்த் தூள்பெருங்காயத்தூள்  மஞ்சத்தூள்சேர்த்து நன்கு அரைக்க வேண்டும் . இந்த விழுதை ஒரு கடாயில் எள் எண்ணை விட்டு கடுகு வெந்தயத்தூள்  சீரகத் தூள் சேர்த்துஅவை வறுபட்டவுடன்  தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்எண்ணை சற்று தாராளமாகவே இருக்கலாம் நன்கு வதங்கிய விழுதை ஆறவிட்டு பாட்டிலில் சேமிக்கலாம்  இதை இட்லி தோசை முதலியவற்றுக்குத் தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் உபயோகிக்கலாம் இன்னும் அவரவர் சுவைக்கேற்ப உபயோகிக்கலாம் ஈரம் படாமல் வைத்திருந்தால் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்      






 


6 comments:

  1. அடடே... நம்ம தக்காளித் தொக்கு. நாங்கள் சீரகம் சேர்க்காமலும் செய்வோம்.

    ReplyDelete
  2. ஆஹா சமையலுக்காக ஒரு தளம் கலக்குங்க ஐயா.....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamiln.in)

    ReplyDelete
  5. தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

    ReplyDelete
  6. உங்கள் கைப்பக்குவம் எங்கள் பாக்கியம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete