Saturday 13 April 2013

இனிய சித்திரை


                                     இனிய சித்திரை.
                                     ----------------------



சித்திரையே சித்திரையே
இத்தனை நாள் எங்கிருந்தாய் ?

மாசி பங்குனி பின் மறைந்திருந்தேன்
தையில் பாதை மாறி பயணம் புகுந்த
பகலவன் மேட ராசிவரக் காத்திருந்தேன்.

நீ வந்தால் ஆண்டு பிறக்கிறது
இவ்வாண்டோ “விஜயவருஷம்
பங்குனியின் பனித்திரை விலக
தகத்தகாய சூரியன் வருமுன்னே
விடியலில் விஷுக் கணி கண்டு
காணும் நலமே தொடர துயர்
துடைப்போம்,அனைவரும் வாழ
வாழ்த்துவோம், வாழ்த்துக்கள்.


இன்று வருஷப் பிறப்பு. எல்லோரும் இன்பமாய் இருக்கும் நேரம்  அதில் இனிப்பு சேர்க்க ஒரு எளிய இனிப்பு செயல் முறை.
தேவையான பொருட்கள்.:-கடலை மாவு ஒரு கப்.
                         பொடித்த சர்க்கரை ஒரு கப்
                         பொடியாய் நறுக்கிய முந்திரிப் பருப்பு
                         கொஞ்சம் பொடித்த ஏலக்காய்த் தூள்
                         நெய் அரை கப்


செய்முறை.:-

வாணலியில்  கடலை மாவை நெய்யில் வறுக்கவும். கை விடாமல் கிளறும்போதுவாசனை வரும். ( மாவு கரியக் கூடாது. )  அடுப்பை அணைத்துஅதில் பொடித்து வைத்த சர்க்கரையை கலந்து கிளறவும். அதில் பொடித்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பையும் ஏலக்காய்த் தூளையும் சேர்க்கவும். சூடு ஆறும் முன்பாக  சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ருசியான பேசின் லட்டு தயார்.
 

 

2 comments:

  1. சுவையான லட்டுக்கு நன்றி...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete